IMF பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்… 

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அலுவலகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்றத்தின் நிதிக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர். 

Social Share

Leave a Reply