இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ, தென், மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply