குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ கிராம் அரிசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் புத்தாண்டுக்கு முன்னதாக ஏப்ரல் மாதத்தில் 10 கிலோ கிராம் அரிசியும், மே மாத முதல் வாரத்திற்குள் 10 கிலோ கிராம் அரிசியும் வழங்கப்படவுள்ளன.
இந்த நிவாரணத் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மட்டுமின்றி, விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் சில நன்மைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.