ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் சுதந்திர மக்கள் சபை இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி நிறுவப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
சுதந்திர மக்கள் சபையின் 6 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளனர்.
ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, உபுல் கலப்பட்டி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் இணைந்துக்கொண்டனர்.