மின்சார மறுசீரமைப்பு, திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி நேற்று(17) வௌியிடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பங்குதாரர்களால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் தினத்திலிருந்து 2 வாரங்களுக்கு, அதன் சட்டபூர்வமான தன்மையை பொதுமக்கள் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.