புஸ்ஸல்லாவையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்

புஸ்ஸல்லாவையில் இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நீரோடையொன்றிலிருந்து இன்று காலை பிரதேச மக்களால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரட்டாசி மேமலை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply