ரயில் சேவைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையால் எதிர்காலத்தில் ரயில் சேவை, நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் எச்.ஆர்.பி.உதயசிறி தெரிவித்துள்ளார். 

நாளாந்தம் ரயில் சேவையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியமையினால், பயணிகள் விசனத்தை வெளியிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதன் காரணமாக உடனடியாக பயிற்சி பெற்ற நபர்களை உரிய சேவைகளில் நியமிக்குமாறும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Social Share

Leave a Reply