IPL 2024 – Qualifier வாய்ப்பினை உறுதி செய்த கொல்கத்தா அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் Qualifier 1 போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பினை உறுதி செய்து கொண்டது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக தடை பட்டமையினால், ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை கொல்கத்தா அணி பெற்றுக்கொண்டது. 

கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி, அகமதாபாதில் இன்று(13.05) இரவு 7.30 நடைபெறவிருந்தது. 

இருப்பினும் போட்டியின் ஆரம்பம் முதல்  பெய்த மழைக் காரணமாக, இந்த போட்டி கைவிடப்பட்டது. 

இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணி 19 புள்ளிகளுடன் தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. 

மேலும், இன்றைய போட்டி கைவிடப்பட்டமையினால் 11ம் புள்ளிகளுடன் தரவரிசையில் 8ம் இடத்திலுள்ள குஜராத் அணி Playoffs சுற்றுக்கு தகுதி பெறும் வாப்பினை இழந்தது. 

ஐபிஎல் தொடரில் 63 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கொல்கத்தா அணி மாத்திரம் Playoffs சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

இந்நிலையில், குஜராத், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள்  Playoffs சுற்றுக்கு தகுதி பெறும் வாப்பினை இழந்துள்ளன. 

Social Share

Leave a Reply