முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கல்வி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கள் இணைந்து குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளன.

இலங்கை வரலாற்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பிலான யோசனை முன்வைக்கப்படுகின்றமை இதுவே முதன்முறையாகும். 

Social Share

Leave a Reply