முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அவரது கடவுச்சீட்டு வழக்கில் சந்தேக நபராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் பெயரிட்டு இன்று(20.05) பிரதான நீதிபதி நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்டநீதிமன்றம் உரிய நடவடிக்கைளை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. அத்தோடு டயானா கமகே அவரது இல்லத்தில் தற்போது இல்லை என்பதனையும் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.