தேர்தல் தொடர்பான கருத்துக்களினால் பங்குச் சந்தையில் குழப்பங்கள்  

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த வாரம் பல்வேறு தரப்பினர் வெளியிட்ட கருத்துக்களினால் பங்குச் சந்தையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தை நீடிப்பதற்காக அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு எவ்வித திட்டங்களும் இல்லை என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் படி ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறும் என ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளதாகவும், அதற்காக வரவு செலவு திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜூன் 15ம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply