இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த மே மாதத்தில் 0.9 சதவீதம் குறைவடைந்து 5.42 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு, 5,389 மில்லியன் டொலர்களிலிருந்து 5,367 மில்லியன் டொலர்களாக 0.4% குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.47 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.