சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் அவர்கள் இன்று(18.6) கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.