இலங்கையில் குறைந்து வரும் பிறப்பு எண்ணிக்கை -என்ன காரணம் தெரியுமா?

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100, 000 இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை 35,000ஆக அதிகரித்துள்ளதாகவும் மகப்பேற்று வைத்தியர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இலங்கையில் 325,000 குழந்தைகள் பிறந்துள்ளதுடன் இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 247,000ஆக குறைவடைந்துள்ளது.

இதனிடையே இறப்புகள் 2017ஆண்டில் 146,000இலிருந்து 2023ஆண்டில் 81,000ஆக அதிகரித்திருந்தன.

திருமணமான பல தம்பதிகள் கருவுற்ற காலத்தில் இலங்கையையை விட்டு வெளியேறியமையே பிறப்புகள் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதமாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஐந்து வருடங்களில் திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply