LPL: காலி அணியுடன் இணைந்த புதிய வீரர்கள் 

லங்கா பிரீமியர் லீக் தொடரின், கோல் மார்வல்ஸ் அணிக்கு புதிதாக இரண்டு வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரான மிலன் ரத்நாயக்க மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஜேகப் டபி ஆகியோர் கோல் மார்வல்ஸ் அணியில் இணைந்துள்ளனர். 

கோல் மார்வல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த லஹிரு குமார உபாதையின் காரணமாக வெளியேறியிருந்ததுடன், சிம்பாபேவை சேர்ந்த சேன் வில்லியம்ஸ் கடவுச்சீட்டு பிரச்சினையின் காரணமாக லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க இயலவில்லை. 

குறித்த இரு வீரர்களுக்கு பதிலாக, கோல் மார்வல்ஸ் அணிக்கு புதிதாக வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 

Social Share

Leave a Reply