புதிய மீன்பிடி சட்டத்திற்கெதிராகச் சுவரொட்டிகள்

அரசினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைபிற்கெதிராக மன்னார் நகரப் பகுதியில் நேற்று
(17/07)சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால்  இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

குறித்த சுவரொட்டியில் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் அனைவரினதும் வயிற்றில் அடிக்கும் புதிய மீன்பிடி சட்டத்தை தோற்கடிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply