நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்த 22 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த மாதம் 23ம் திகதி 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(24) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த 22 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 30ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.