ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ச தாம் முன்வைத்த “நாமல் தெக்ம” வேலைத்திட்டம் தொடர்பில் வீடு தோறும் சென்று விளக்கமளிக்கவுள்ளார்.
இன்று (07.09) முதல் நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
இதன்படி, 13628 தேர்தல் காரியாலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று சுப நேரத்தில் இந்த வைலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.