வாக்களிப்பு நிறைவு

வாக்களிப்பு நிறைவு

2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 04 மணியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை, வாக்குச் சீட்டுகளில் பென்சில்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சீட்டைக் குறிக்க பேனாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்
இருப்பினும் வாக்காளர்களுக்கு பென்சில்கள் வழங்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகளின் செல்லுபடியாகும் தன்மை குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில் பென்சில்களால் குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் செல்லுபடியாகும் என்றும், இது தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply