கொழும்பு – பதுளை தபால் ரயில் இரத்து

கொழும்பு - பதுளை தபால் ரயில் இரத்து

நாட்டில் நிலவும் சீரற்ற வாநிலை காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் இன்றிரவு இரத்து
செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளைக்கான தபால் ரயில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.30 இற்கு புறப்படவிருந்தது.

இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான காலநிலை காரணமாக மலையகப் பாதையில் இயங்கும் ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply