முதலை கடித்து பெண்ணொருவர் பலி

முதலை கடித்து பெண்ணொருவர் பலி

வவுனியா உளுக்குளம், பாவற்குளம் பகுதியில் முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கால்நடைகளுடன் சென்ற போது கால்வாயில் முதலை கடித்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் 67 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply