கொழும்பில் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும் நேற்றைய தினம்
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியப் பிரஜையான 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.