யாழில் போதைப்பொருடன் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் இவர்கல் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முதற்கட்ட விசாரணைகளின்போது
இவர்களிடமிருந்து 2 கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலீசார் மீட்டுள்ளனர்.

நாவற்குழி பகுதியை சேர்ந்த இருவரும், குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளனர்.

Social Share

Leave a Reply