போப் பிரான்சிஸின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்

கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசர் போப் பிரான்சிஸின் மறைவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“வணக்கத்திற்குரிய புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் கருணை, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் அவரது மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்” ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply