பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக 06 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பாதாள உலக குழுவின் தலைவரும் போதைப்பொருள் வர்த்தகரும் என கருதப்படும் கஞ்சிபானை இம்ரானுடன் தொடர்புடையவர்கள் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

Social Share

Leave a Reply