பெலியத்த பகுதியில் வாகன விபத்து – 30 பேர் காயம்

ஹம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (29.04) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply