நாட்டில் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சகல சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசியை ஏற்றுவதற்கு தடுப்பூசி தொடர்பான ஆலோசனை குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரம் ஒரு டோஸ் செலுத்தப்பட்டுள்ள 16 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
