இன்றும் பல இடங்களில் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

வடமேற்கு மாகாணத்தில் பல தடவை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply