தென் சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளத்தின் மீதான ட்ரோன் தாக்குதல் குறித்து சைப்ரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ் மேலும் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
ஈரானில் தயாரிக்கப்பட்ட “ஷாஹெட்” ட்ரோன் அக்ரோதிரி பகுதியில் உள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளத்தில் மோதியதாக அவர் கூறினார்.
விபத்தில் சொத்துக்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய மற்றும் பிற தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலை எதிர்கொள்ளும் வகையில் சைப்ரஸ் எந்த இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்க விரும்பவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.