எரிவாயு விலை உயர்வின் காரணமாக, இன்று நள்ளிரவு முதல் சில உணவு வகைகளின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவினாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி போன்ற உணவுப்பொருட்களின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.