இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்!

எரிவாயு விலை உயர்வின் காரணமாக, இன்று நள்ளிரவு முதல் சில உணவு வகைகளின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவினாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி போன்ற உணவுப்பொருட்களின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

Social Share

Leave a Reply