சென்னையில் நடைபெற்ற முக்கிய தலைமைத்துவ மாநாட்டில் இலங்கை துணை உயர் ஸ்தானிகர் பங்கேற்பு!

சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி கணேசநாதன் கீதீஸ்வரன், மார்ச் 2, 2026 அன்று சென்னை தாஜ் கோரோமெண்டல் ஹோட்டலில் நடைபெற்ற தமிழ்நாடு தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டை The Week ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, புதுமை, நல்லாட்சிமுறை மற்றும் பிராந்திய மேம்பாடு உள்ளிட்ட முக்கிய விடயங்களை விவாதிக்க அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் துறை வல்லுநர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் மு. க.ஸ்டாலின் உரையாற்றி, தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான மாநில அரசின் தொலைநோக்கு திட்டங்களை விளக்கினார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின், தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி கருணாநிதி ஆகியோரும் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர். அதேபோல் Microsoft நிறுவனத்தின் AI இயக்குநர் செசில் சுந்தர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

நிகழ்வின் போது, துணை உயர் ஸ்தானிகர் டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன், பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி இலங்கை மற்றும் தமிழ்நாடு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்புகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

Social Share

Leave a Reply