சிமெந்து விலை உயர்வு- கட்டுமானத் துறைக்கு புதிய சுமை!

நாட்டில் சிமெந்து நிறுவனங்கள் விலையை அதிகரித்துள்ளதால் கட்டுமானத் துறைக்கு புதிய சுமை ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் உற்பத்தியாளர்களின் அறிவிப்பின்படி, சிமெந்து ஒரு மூட்டையின் விலை ரூ.150 முதல் ரூ.175 வரை உயர்ந்துள்ளது.

இதேவேளை, மணல், கல், இரும்பு உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பொருட்களின் விலையும் அண்மையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வுகள் தற்போது நடைபெற்று வரும் கட்டுமானத் திட்டங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply