சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் முக்கிய பங்காற்றி ஜெய் ஷா, 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் 22வது இடத்தைப் பெற்றுள்ளார்.
“அதிகாரம் மற்றும் பொறுப்பு இணைந்தே செயல்படும். இந்த அங்கீகாரம் நியாயமானது மட்டுமல்ல, மேலும் உயர்ந்த இலக்குகளை அடைய எங்கள் தலைவரை ஊக்குவிக்கும் ஒன்று” என ICC தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியல் இந்தியாவின் முக்கிய மற்றும் செல்வாக்கு வாய்ந்த நபர்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுவதுடன், கிரிக்கெட் நிர்வாகத்தில் ஜெய் ஷாவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த தரவரிசை வெளிப்படுத்துகிறது.