தெதுரு ஓயா விபத்து – உயிரிழப்பு 6 ஆக உயர்வு!

தெதுரு ஓயா பகுதியில் இடம்பெற்ற துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கொபஹிங்கனே பகுதியில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போது மேலும் நான்கு உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

15 பேர் கொண்ட குழு ஆற்றில் குளிக்கச் சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், திடீர் ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தோரில் நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் மூன்று பள்ளி மாணவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டு நிக்கவரெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் 70 வயதுடைய ஆண் ஒருவரும் 34 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டடுள்ளனர், பின்னர் மேலும் நான்கு உடல்கள் மீட்கப்பட்டதுடன் மொத்த உயிரிழப்பு 6 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, 39 மற்றும் 72 வயதுடைய இரண்டு ஆண்கள், 42 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் 9, 13, 18 வயதுடைய மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் கடற்படை அணிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

Social Share

Leave a Reply