பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் நான்கு நாள் பயணமாக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மன்னர் சார்லஸின் ஆட்சிக்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற அரசுமுறைப் பயணமாக இது கருதப்படுவதுடன், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்றதன் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. மேலும், கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு பிரித்தானிய மன்னர் அமெரிக்காவுக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும்.
இந்தத் தம்பதியினரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோர் அன்புடன் வரவேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சார்லஸ் மற்றும் கமிலா ஆகியோர் ஊடகத் தலைவர்கள், வாஷிங்டன் பிரமுகர்கள், அமெரிக்க செனட்டர் டெட் குரூஸ், கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் பிற நாடுகளின் தூதர்களுடன் சுமுகமான கலந்துரையாடல்களையும் நடத்தினர்.