களுத்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

களுத்துறை வடக்குப் பகுதியில் 600 கிராம் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலோரக் பொலிஸ் பிரிவினர் மற்றும் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து நடத்திய சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Social Share

Leave a Reply