உலக சந்தையில் அதிகரிக்கும் எரிபொருள் விலைகள்!

ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரான் இராணுவம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.

அதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

ஒரு கலன் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 3.75 சதவீதம் அதிகரித்து, 97.8 டாலராகப் பதிவாகியுள்ளது.

Social Share

Leave a Reply