‘உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம்’

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.

இம்மாதம் நடுப்பகுதியில் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வதாகவும், குறித்த பதவிக்கு நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவை நியமிக்கவுள்ளதாகவும் சில செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

'உண்மைக்கு புறம்பான  செய்திகளை நம்ப வேண்டாம்'

Social Share

Leave a Reply