இலங்கையின், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று சில கொடுப்பனவு திட்டங்களை அறிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியிலுள்ள மக்களுக்கு இந்த திட்டங்கள் ஓரளவிலேனும் கஷ்டங்களை குறைக்குமென நம்பலாம்.
அரச உத்தியோகத்தர்களுக்கு இம்மாதம் முதல் மாதாந்தம் 5000 ரூபா விசேட கொடுப்பனவும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 5000ரூபா விசேட கொடுப்பனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி கொடுப்பனவு பெற்றுக்கொள்பவர்களுக்கு 1000 ரூபா அதிகரிக்கப்பட்டு 3500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான வரிகள் முழுமையாக நீக்கப்படுகின்றன. தோட்ட தொழிலார்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மா 80 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.
இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து ஊடங்களுக்கு இந்த விடயங்களை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
