மேற்கிந்திய தீவுகள் செல்கிறார் மஹேல

இலங்கை,சிம்பாவே அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடர் இலங்கையில் 16 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் மஹேல ஜெயவர்தன இம்மாதம் 09ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் இம்மாதம் 14 ஆம் திகதி 19 வயத்துக்குட்பட்டவர்களுக்கான உலக கிண்ணம் ஆரபிக்கவுள்ளது. இலங்கை 19 வயத்துக்குட்பட்ட அணியுடன் இணைந்து அணியினை வழிநடத்தவே மேற்கிந்திய தீவுகளுக்கு மஹேல ஜெயவர்தன பயணமாகிறார். முதல் நாளிலேயே இலங்கை அணி போட்டியில் விளையாடவுள்ளது.

மஹேல ஜெயவர்தனமேற்கிந்திய தீவுகள் செல்வதனால் சிம்பாவே அணியுடனான இலங்கை அணியின் போட்டிகளுக்கு இலங்கை உயர் திறன் நிலைய வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் ருமேஷ் ரத்நாயக்க இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு உயர் திறன் நிலைய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் ருவின் பீரிஸ், சிம்பாவே தொடருக்கான இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் செல்கிறார் மஹேல
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version