பாரசூட் விபத்தில் வெளிநாட்டவர் காயம்

கலஹாவில் உள்ள லுல்கதுர பகுதியில் இருந்து பாராசூட்டில் பயணித்த 35 வயதான ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் ரலிமாங்கொடையில் தரையில் மோதி காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (12/01) தரையிறங்கும் போது 30 அடி உயரமான மரத்தில் பாரசூட் சிக்கியதில் தரையில் விழுந்ததாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த வெளிநாட்டவர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கலஹா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாரசூட் விபத்தில் வெளிநாட்டவர் காயம்

Social Share

Leave a Reply