கொழும்பு, பொரளை தேவாலயத்தில் கைகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் பொலிஸ் விசாசரணைகள் தொடர்பில் பேராயர் ரஞ்சித் மல்கம் ஆண்டகை விமர்சிப்பது சரியல்லவென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்டன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களில், இவ்வாறான கருத்தை ஆயர் வெளியிட்டுள்ளார். விசாரணைகள் நடைபெற்றுகொண்டுள்ளன. விசாரணைகள் வெறுமனே இரண்டு மூன்று மணித்தியாளங்களில் நிறைவடையும் விடயமல்ல. அதற்கான காலம் தேவை. அதற்குள் பொலிஸ் விசாரணை தொடர்பில் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென நேற்றைய தினம் (15.01) கமல்குணரட்டன தெரிவித்துள்ளார்.
