இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத் இன்று(15.04) 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரியும், தேர்போதைய பொருளாதர சிக்கலுக்கு உரிய தீர்வை வழங்குமாறு கோரியும்கொழும்பு கோட்டாகோகாமவில் (காலி முகத்திடல்) இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தற்போது அரசுக்கு எதிராக நடாத்தப்பட்டு வரும் போராட்டத்தில் விளையாட்டு துறை சார்ந்தவர்கள் கலந்துகொள்ளும் அதேவேளை, கிரிக்கெட் வீரர்களும் தங்களது ஆதரவுகளை நேரடியாக மற்றும் அறிக்கைகள் ஊடாக வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தம்மிக்க பிரசாத் 24 மணி நேர உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.