முல்லை மாணவிகள் துஸ்பிரயோ வழக்கு விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கு நேற்று (30.06) நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன அதேவேளை மேலும் இரண்டு வழக்குகளை பொலிசார் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணையோடு, சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம், கற்பழிப்பு ஆகிய மேலும் இரண்டு வழக்குகள் பொலிசாரால் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. மூன்று வழக்குகளில் ஆசிரியரை 14.07.2022 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு மாணவனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது இரு வழக்குகள் 07 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளன.

குறித்த B /645/22 வழக்கு இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் சார்பில் சிரேஸ்ர சட்டத்தரணிகளான அன்ரன் புனிதனாயகம், கௌதமன் ஆகியோரும், பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் சட்டத்தரணி எஸ் தனஞ்சயனும் முன்னிலையாகியிருந்தனர் இதன் போது இருதரப்பு வாதங்களையும் செவி மடுத்த நீதிபதி ஆசிரியரை 14.07.2022 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவனை ஐந்து இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்லவும் உத்தரவிட்டார்

இதேவேளை பொலிசாரிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் மாணவிகள் சிலர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு இரண்டு புதிய வழக்குகள் நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த குற்றச்சாட்டு பொலிசாரிடம் முண்வைக்கப்பட்ட நிலையில் மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த ஆசிரியர் 13 வயது பதினோரு மாதங்களை உடைய மாணவி ஒருவரை கற்பழித்த குற்றச்சாட்டு பொலிசாரிடம் முண்வைக்கப்பட்ட நிலையில் மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பொலிசாரினால் கற்பழிப்பு குற்றச்சாட்டு சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகளது புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தியே மாணவிகள் துஸ்ப்பியோக படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியருக்கு பாலியல் சார்ந்த நோய்கள் உள்ளனவா என்பது தொடர்பில் பரிசீலிக்குமாறும் பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மற்றும் பொலிசார் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேக நபரான ஆசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில் குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து மாணவிகள் பலரின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

இவ்வாறு ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் சிலரும் செய்த சேட்டையை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்து ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை எடுத்து பார்வையிட்டபோது பல மாணவிகளின் நிர்வாணமாக எடுத்துக்கொண்ட வீடியோக்கள் மாணவிகளின் நிர்வாணமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மாணவிகளுடன் உடலுறவு கொண்ட வீடியோக்கள் குறித்த தொலை பேசியில் இருப்பதை அவதானித்து அதனை சோதித்தபோது அந்த ஆசிரியரும் மாணவர்களும் இந்த செயற்பாடுகளில் தொடர்பு கொண்டிருந்தமை அறியக்கூடியதாக இருக்கின்றது

குறிப்பாக இந்த ஆசிரியர் மாணவர்களை பயன்படுத்தி மாணவர்களை மாணவிகளோடு காதல் வலையில் விழுத்தி அவர்கள் ஊடாக அந்த மாணவிகள் உடைய நிர்வாண புகைப்படங்களை பெற்று ஆசிரியரும் அந்த மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இவ்வாறான பின்னணியில் இந்த ஆசிரியருடைய தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் பொலிசாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரை விசாரணைக்கு அழைத்து பொலிசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது இரு மாணவியை ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இவ்வாறான பின்னணியில் குறித்து ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலைமையில் குறித்த ஆசிரியரோடு சேர்ந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொலிசார் கைது செய்திருந்தனர்

சுமார் பதினேழு பதினெட்டு வயதை உடைய இந்த ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது மாணவர் ஒருவர் எதிர்வரும் 30.6.2022 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட தோடு ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் இவ்வாறான பின்னணியில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் 23.07.2022 சட்டத்தரணி வி.கௌதமன் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்

இந்த வேளையிலே இந்த பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பாக மன்றிலே தோன்றிய சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் -இந்த செயல்பாடு தொடர்பில் நீதி மன்றத்தை தெளிவுபடுத்தி இது ஒரு பாரதூரமான செயற்பாடு எனவும் பல்வேறு மாணவிகளை துஷ்பிரயோகம் மேற்கொண்டதோடு பல பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அவர்களை அச்சுறுத்தி உள்ளதையும் எடுத்துக் கூறி இது பொது மக்களிடையே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது இது ஒரு சமூகப் பிரச்சனை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்

இந்த சம்பவத்தின் பாரதூர தன்மையை நன்கு அவதானித்த முல்லைத்தீவு நீதிமன்றத்தின் நீதிபதி ரி.சரவணராஜா சந்தேக நபர்களான ஆசிரியர் ஒருவரையும், மாணவன் ஒருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்உத்தரவிட்டிருந்தார்.

முல்லை  மாணவிகள் துஸ்பிரயோ வழக்கு விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்


`

Social Share

Leave a Reply