நேற்று இரவு மேல்மாகாணத்தின் சில பகுதிகளில் அமுல் செய்யபப்ட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டது முதல் பலரும் தங்களது எதிர்புகளை வெளியிட்டு வந்தனர். இன்று நடைபெறவுள்ள போராட்டங்களை தடுக்கவே இந்த ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு சட்ட விரோதமானது எனவும், உடனடியாக நீக்கப்படவேண்டுமெனவும் அகில இலங்கை சட்டத்தட்டணிகள் சங்கம் தெரிவித்திருந்தது. இவ்வாறான சூழ் நிலையில் இன்று காலை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
![ஊரடங்கு நீக்கம்](https://vmedianews.com/wp-content/uploads/2021/09/curfew.jpg)