முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று(22.08) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் ககைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் இன்று (23.08) மாலை மீன்பிடி திணைக்களத்தினர் ஆஜர் படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்களை நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கடற்படையினரின் சுற்றிவளைப்பில் மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்படும் போது கைப்பற்றப்பட்ட மீனவர்களுடைய மீன்களை மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற் படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியா நாகப்பட்டினம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகின்றது.