பதுளைக்கும், கொழும்பு கோட்டைக்கும் இன்றிரவு பயணிக்கவிருந்த 2 தபால் தொடரூந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளில் தொடரூந்து மார்க்கத்தில், மரம் முறிந்து வீழ்த்தமையாலேயே தபால் தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பயணப்பாதையை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.