குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 26ம் திகதி வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றுமொரு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமையினால், குறித்த விண்ணப்பதாரர்களுக்கு வேறு திகதி மற்றும் நேரத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே எதிர்வரும் பொது விடுமுறை தினத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது பிராந்திய அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply