எரிபொருள் விற்பனை சந்தைக்குள் வெளிநாட்டு நிறுவனங்கள்!

இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் உள்நுழைவதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (27.03) அறிவித்துள்ளார்.

Shell Plc உடன் இணைந்து சீனாவின் Sinopec, United Petroleum of Australia மற்றும் USA RM Parks ஆகிய நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று நிறுவனங்களுக்கு இலங்கையில் இயங்குவதற்கான உரிமங்களை வழங்குவதற்கு எரிசக்தி குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற கொள்முதல் குழுக்கள் ஒப்புதல் மற்றும் பரிந்துரையை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) இயக்கப்படுகின்றன 150 எரிபொருள் நிலையங்கள் குறித்த மூன்று நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்ய, சேமித்து வைக்க, விநியோகிக்க மற்றும் விற்பனை செய்ய என 20 ஆண்டுகள் நாட்டிற்குள் செயற்பட அவர்களுக்கு உரிமம் வழங்கப்படவுள்ளது.

மேலும் இந்த நிறுவனங்களால், புதிய இடங்களில் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நிறுவப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply