வெள்ளவத்தை பகுதியில் உள்ள கரையோர புகையிரத பாதையில் தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி நேற்று (03.04) பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.